search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடக்குபனவடலிசத்திரத்தில் பகுதி நேர ரேசன் கடை திறப்பு -ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்பு
    X

    வடக்குபனவடலிசத்திரத்தில் பகுதி நேர ரேசன் கடை திறப்பு -ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்பு

    • ராஜா எம்.எல்.ஏ. ரேசன் கடையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் தங்கப்பாண்டியன், ஆசிரியர் சாமியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கு பனவடலி கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடை திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி ஏசுதாஸ், கூட்டுறவு சங்க தனி அலுவலர் செல்வகணேஷ் மற்றும் சுரேஷ் பனவடலிசத்திரம் கூட்டுறவு சங்க செயலாளர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பகுதிநேர ரேசன் கடையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தங்கப்பாண்டியன், ஆசிரியர் சாமியா, ராசா, வெளியப்பன், கருப்பசாமி, ஜலால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×