search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிபட்டியில் ஊராட்சி செயலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்
    X

    கோப்பு படம்

    ஆண்டிபட்டியில் ஊராட்சி செயலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

    • ஆண்டிபட்டியில் உள்ள 30 கிராம ஊராட்சிகளில் தற்பொழுது 22 ஊராட்சி செயலாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 22 ஊராட்சி செயலாளர்கள் 2 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டியில் உள்ள 30 கிராம ஊராட்சிகளில் தற்பொழுது 22 ஊராட்சி செயலாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். 8 ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர் பணி காலியாகவே உள்ளது. 8 ஊராட்சிகளுக்கும் அருகிலுள்ள கிராம ஊராட்சி செயலாளர்கள் கூடுதல் பணி கவனித்து வந்தனர்.

    இந்நிலையில் பணி வரன்முறையை அரசு ஆணையாக வெளியிடுதல், வருடம் முழுவதும் ஊதியம் வழங்குதல் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆண்டிப்பட்டியில் உள்ள 22 ஊராட்சி செயலாளர்கள் 2 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிராம ஊராட்சிகளில் பொது மக்கள் பணி பாதிப்படைந்துள்ளது என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் இதுகுறித்து டி.ராஜகோபாலன் பட்டி ஊராட்சி தலைவர் வேல்மணி பாண்டியன் கூறியதாவது, தற்போதைய நிலையில் ஊராட்சி செயலாளர்கள் வேலை நிறுத்தத்தால் ஊராட்சி பணிகளில் எவ்வித பாதிப்பும் இல்லை.

    மக்கள் பணிகளை நேரடியாக நாங்களே சென்று அவர்கள் குறை கேட்டு தீர்த்து வைத்துக் கொண்டிருக்கிறோம். தற்போது வரை எவ்விதமான பாதிப்பும் ஊராட்சிகளில் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×