என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது
    X

    ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது

    • சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடி ரஞ்சித்குமார் கொலை செய்யப்பட்டார்.
    • இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த வாலிபர் கைதானார்.

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி அம்பாள் ஏரி ரோட்டை சேர்ந்தவர் ரஞ்சித் என்கிற ரஞ்சித்குமார் (வயது 29). பிரபல ரவுடியான இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் இருந்த இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வெளியே வந்தார்.

    பின்னர் அயோத்தியாப்பட்டணம் அருகில் உள்ள மாசிநாயக்கன்பட்டியில் தனது 2-வது மனைவி பிரியாவுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடையாப்பட்டி வேடியப்பன் கோவில் எதிரே உள்ள சாக்கடை பள்ளத்தில் ரஞ்சித் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவத்தன்று ரஞ்சித்தை வீட்டில் இருந்து அழைத்துச் சென்ற தாதகாப்பட்டியை சேர்ந்த மகேந்திரன் (வயது 27), சங்ககிரியை சேர்ந்த புகழேந்தி (30), சேலம் குகையை சேர்ந்த பிரியாணி மணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த வாலிபர் மதன் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    Next Story
    ×