என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் அருகே கிணற்றில் மூதாட்டி பிணம்- போலீசார் விசாரணை
- வடகடம்பாடி மேடகுப்பம் பகுதியில் உள்ள கிணற்றில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்
- போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி மேடகுப்பம் பகுதியில் உள்ள கிணற்றில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவருக்கு சுமார் 65 வயது இருக்கும். அவர் எதற்காக இங்கு வந்தார்? எப்படி கிணற்றில் விழுந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






