search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் கவிழ்ந்து மூதாட்டி சாவு
    X

    கார் கவிழ்ந்து மூதாட்டி சாவு

    • தனியார் கல்லூரி அருகே வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தில் ஒன்னம்மா சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்

    கிருஷ்ணகிரி,

    கர்நாடகா மாநிலம் கும்கூர் முத்துகிரி பகுதியைச் சேர்ந்தவர் ஒன்னம்மா (வயது67).

    இவர் தனது உறவினர்களான சிகேகவுடா (46), கரிகவுடா (45), லட்சும்மா (52), ஜெயம்மா(55) ஆகியோருடன் சென்னைக்கு காரில் புறப்பட்டு சென்றார். காரை உறவினர் ஒருவர் ஓட்டி சென்றார்.

    அந்த கார் கிருஷ்ணகிரி மாவட்டம் கந்தி குப்பத்தை அடுத்த ஒரப்பம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் ஒன்னம்மா சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேரை உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    இந்த சம்பவம் குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×