என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மீஞ்சூர் அருகே வடமாநில கும்பல் வீடு புகுந்து கொள்ளை முயற்சி- பொதுமக்கள் திரண்டதும் தப்பி ஓட்டம்
- சத்தம் கேட்டு எழுந்த ராஜ்கண்ணன் வீட்டின் வெளியே கொள்ளையர்கள் நிற்பதை கண்டு கூச்சலிட்டார்.
- வட மாநில கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த அத்திபட்டு புதுநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ் கண்ணன்.தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு வழக்கம் போல் குடும்பத்துடன் தூங்கினார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் 4 பேர் கும்பல் வீட்டின் சுவர் ஏறி குதித்து புகுந்தனர். அவர்கள், வீட்டின் மேல்மாடிக்கு சென்று கொள்ளையில் ஈடுபட கதவை தட்டினர். சத்தம் கேட்டு எழுந்த ராஜ்கண்ணன் வீட்டின் வெளியே கொள்ளையர்கள் நிற்பதை கண்டு கூச்சலிட்டார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் திரண்டனர். உடனே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 4 வாலிபர்களும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. தொழிலாளர்கள் போல் இங்குள்ள நிறுவனங்களில் வேலைபார்க்கும் அவர்கள் இரவு நேரத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவது தெரிந்தது. வட மாநில கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்