என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எண்ணூரில் ரூ.81 லட்சம் செலவில் புதிய பள்ளி கட்டிடம்- கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
- கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- இரண்டு மாடியில் 6 வகுப்பறைகள் மற்றும் நவீன கழிப்பறை வசதியுடன் கூடிய பணியை ஆறு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர், அத்திவாக்கம் பஜார் தெருவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு போதிய வகுப்பறை இல்லாமல் இருந்தது. இதையடுத்து திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.75 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கவுன்சிலர் கோமதி சந்தோசின், மேம்பாட்டு நிதி ரூ.6.50 லட்சம் செலவில் பழைய கட்டிடத்தை சீரமைக்க திட்டமிடப்பட்டது.
இந்த கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கவுன்சிலர் கோமதி சந்தோஷ் தலைமை தாங்கினார். கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இரண்டு மாடியில் 6 வகுப்பறைகள் மற்றும் நவீன கழிப்பறை வசதியுடன் கூடிய பணியை ஆறு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சொக்கலிங்கம், தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்