search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளில் புதிதாக போதைப் பொருள் தடுப்பு குழு: போலீஸ் அதிகாரி தகவல்
    X

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளில் புதிதாக போதைப் பொருள் தடுப்பு குழு: போலீஸ் அதிகாரி தகவல்

    • கட்டுமான பணிகளில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்கள் போதைப்பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.
    • போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க அனைத்து கடைகளிலும் போலீசார் கடுமையான சோதனை மேற்கொள்ள வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் காவல்துறை மண்டலம் சார்பில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 70 பள்ளி-கல்லூரி நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் நடைபெற்றது. தமிழக கூடுதல் காவல் துறை இயக்குனர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன், டி.ஐ.ஜி.பகலவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சுதாகர், பிரதீப் சீபாஸ் கல்யாண் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து கூடுதல் காவல் துறை இயக்குனர் சங்கர் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் உள்ள தொழிற்சாலை, கட்டுமான பணிகளில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்கள் போதைப்பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். இதனை பார்க்கும் நமது மாணவர்களும், இளைஞர்களும் அதிக அளவில் இதை பயன்படுத்துகிறார்கள்.

    இதனை பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்யும்போது காண முடிகிறது. எனவே போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க அனைத்து கடைகளிலும் போலீசார் கடுமையான சோதனை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் அனைத்து மக்கள் கூடும் இடங்களிலும் கட்டாயம் கண்ணில் தெரியும்படி வைக்க வேண்டும். காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் தடுப்பு குழு உருவாக்கப்படும். அதன் அடிப்படையில் போதை இல்லா காஞ்சிபுரம் மண்டலம் உருவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×