search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்தங்கரைஅருகே   போலி மருத்துவர் சிக்கினார்
    X

    மெடிக்கல் கடைக்கு சீல் வைக்கப்பட்ட காட்சி.

    ஊத்தங்கரைஅருகே போலி மருத்துவர் சிக்கினார்

    • இவர் மருந்தகம் வைத்து சட்டத்திற்கு புறம்பாக மருத்துவம் பார்த்து வந்தார்.
    • ஊத்தங்கரை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மதன்குமார் அவர் மருந்தகத்தை ஆய்வு மேற்கொண்டார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள கீழ்.எட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் (வயது 47). இவர் மருந்தகம் வைத்து சட்டத்திற்கு புறம்பாக மருத்துவம் பார்த்து வந்தார்.

    இவர் போலி மருத்துவர் என்று தகவல் கிடைத்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவ இணை இயக்குனரின் உத்தரவின் பேரில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மதன்குமார் அவர் மருந்தகத்தை ஆய்வு மேற்கொண்டார். அவருடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத், காவலர் சிங்காரவேல் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் நித்யா ஆகியோர் முன்னிலையில் கைது செய்யப்பட்டு, மருந்தகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

    Next Story
    ×