என் மலர்
உள்ளூர் செய்திகள்

பென்னாகரம் அருகே இடி தாக்கி கருகி செத்த ஆடுகள்.
பென்னாகரம் அருகே இடி தாக்கியதில் ஆடுகள் கருகி சாவு
- இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
- 10 ஆடுகள் பலியான பரிதாபம்.
பென்னாகரம்,
பென்னாகரம் அருகே உள்ள வட்டுவனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கோடுப்பட்டி கிராமத்தில் வசிபவர் திம்மன் மகன் ராஜி. இவர் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்து தொழில் செய்து வருகிறார்.
நேற்று வழக்கம்போல் ஆடு மேய்த்து விட்டு மாலை தன் வயல் வெளியில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு வந்து விட்டார். நேற்று இரவு 8 மணியளவில் திடீரென பலத்த மழை பெய்தது. பலத்த சத்தத்துடன் இடி,மின்னலும் தாக்கியது.அப்போது இடி இடித்ததில் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்தன.
Next Story






