search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே  தனியார் பள்ளி மாணவன் மாயம்
    X

    கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளி மாணவன் மாயம்

    • பல்வேறு இடங்களில் விசாரித்தும் முகமது சுபான் குறித்து எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.
    • இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் அப்துல் ஷெரிப் புகார் செய்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சரகர் தசரதராமன் தெருவை சேர்ந்தவர் அப்துல் ஷெரிப். இவரது மகன் முகமது சுபான் (வயது16).

    அதே பகுதியில்உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 25-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்ற முகமது சுபான் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    பல்வேறு இடங்களில் விசாரித்தும் முகமது சுபான் குறித்து எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் அப்துல் ஷெரிப் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்குப்பதிந்து மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×