என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் மிலாடிநபி கொண்டாட்டம்
    X

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் மிலாடிநபி கொண்டாட்டம்

    • மாணவி ரபியாஸனா நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை பற்றி உரையாற்றினார்.
    • நிகழ்ச்சியில் மாணவி மும்தாஜ் குர் ஆன் வாசித்தார்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் மிலாடிநபி பண்டிகை கொண்டாடப்பட்டது. மாணவி ஹரிணி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். கல்வி ஆலோசகர் உஷாரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் முன்னிலை வகித்தார். மாணவி ஆப்ரின் ஹாஜராள் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் மாணவி ரபியாஸனா நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை பற்றி உரையாற்றினார். மேலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகள் முகம்மது நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை பற்றி நாடகமாக நடித்து காட்டினர். மாணவி மும்தாஜ் குர் ஆன் வாசித்தார். மாணவி சஞ்சுஸ்ரீ நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×