search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
    X

    மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

    • மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.41ஆயிரத்து 900 மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மேலூர்

    மேலூர் வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.41ஆயிரத்து 900 மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வட்டார கல்வி அலுவலர் அழகுமீனா தலைமையில் நடந்தது. இதில் மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி ஒன்றியங்களைச் சேர்ந்த 10 மாற்றுத்திறன் மாணவ-மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன. வட்டார வள மைய மேற்பார்வையாளர் கீதா மற்றும் சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×