என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாடார் இளைஞர் பேரவை சார்பில் முதியோர்களுக்கு உதவி
    X

    நாடார் இளைஞர் பேரவை சார்பில் முதியோர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

    நாடார் இளைஞர் பேரவை சார்பில் முதியோர்களுக்கு உதவி

    • சம்மட்டிபுரத்தில் நாடார் இளைஞர் பேரவை சார்பில் முதியோர்களுக்கு உதவி வழங்கப்பட்டது.
    • அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை அவைத்தலைவருமான எஸ்.கே.மோகன் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தகம், பேனா, முதியோர்க ளுக்கு சேலை வழங்கினார்.

    மதுரை

    அகில இந்திய நாடார் இளைஞர் பேரவையின் மதுரை மேற்கு தொகுதி சம்மட்டிபுரம் கிளை சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சம்மட்டிபுரம் மீனாட்சி சுவீட்ஸ் ஸ்டாலில் நடந்தது.

    கிளைத்தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். பேரவையின் பொதுச் செயலாளர் வி.பி. மணி முன்னிலை வகித்தார்.

    மதுரை நாடார் உறவின்முறை பொதுச் செயலாளரும், அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை அவைத்தலைவருமான எஸ்.கே.மோகன் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தகம், பேனா, முதியோர்க ளுக்கு சேலை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகரதலைவர் குமார், மேற்கு தொகுதி தலைவர் சிவக்குமார், பொருளாளர் பால்ராஜ், துணைத்தலைவர் தவசிலிங்கம், ஜெய்சங்கர், வினோத், மத்திய தொகுதி தலைவர் கார்த்திகை செல்வவம், கிழக்கு தொகுதி முருகேச பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    Next Story
    ×