என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கூடலூரில் பூங்கா அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்தை கோட்டாட்சியா் ஆய்வு
    X

    கூடலூரில் பூங்கா அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்தை கோட்டாட்சியா் ஆய்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது.
    • பூங்கா அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.

    ஊட்டி,

    கூடலூா் மாா்த்தோமா நகரில் பூங்கா அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்தை கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தார்.கூடலூா் நகா் 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது. தென் மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் கூடலூா் வழியாகத்தான் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.

    இதற்காக இயற்கை சுற்றுலாவுடன் கூடிய பூங்கா அமைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கூடலூா்-மைசூா் சாலையிலுள்ள மாா்த்தோமா நகரில் இடம் தோ்வு செய்யப்பட்டது. ஆனால் பூங்கா அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.

    தொடா்ந்து நகா் மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தியதன் பேரில் கோட்டாட்சியா் இடத்தை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் கூடலூா் வட்டாட்சியா் சித்தராஜ் மற்றும் வருவாய்த் துறையினா், நகா் மன்ற உறுப்பினா்கள் வெண்ணிலா சேகா், உஸ்மான், வா்கீஸ், தனலட்சுமி, ஆபிதா பேகம், சத்தீயசீலன் உள்ளிட்டோரும் சென்று பாா்வைட்டனா்.

    Next Story
    ×