search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரடாச்சேரி ஒன்றியக்குழு கூட்டம்
    X

    ஒன்றியக்குழு கூட்டத்தில் அதன் துணைத்தலைவர் பாலச்சந்திரன் பேசினார்.

    கொரடாச்சேரி ஒன்றியக்குழு கூட்டம்

    • எண்கண் வெட்டாறு ரெகுலேட்டர் அருகே ஆகாயத் தாமரை செடிகள் தேங்கியுள்ளது.
    • 65 குடிநீர் மேல்தேக்க தொட்டிகள் அமைக்க நடவடிக்கை.

    திருவாரூர்:

    கொரடாச்சேரி ஒன்றியக்குழுவின் சாதாரணக் கூட்டம் அதன் துணைத் தலைவர் பாலச்சந்திரன் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன், முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் பிரவின்குமார் தீர்மானங்களை படித்தார்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-

    நாகூரான்: பருவ மழையை சமாளிக்க சிறப்பாக வடிகால் தூர்வாரப்பட்டது. வளவநல்லூர் பள்ளி சாலையை சீரமைக்க வேண்டும். ஏசுராஜ் : வண்டாம்பாளையம் சிவசக்தி நகரில் குடிநீர் மேல் தேக்க தொட்டி அமைக்க வேண்டும். ஆனந்த்: அரசமங்கலம் சாலையை சீரமைக்க வேண்டும்.

    கவிதா: அத்திசோழமங்கலத்தில் தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

    பெருமாளகரம் மேலத்தெருவில் வடிகால் வசதி செய்து தர வேண்டும். மீரா: மேலராதாநல்லூர், காவாலக்குடி சாலையை சீரமைக்க வேண்டும்.

    உமாமகேஸ்வரி: கமலாபுரம் தார்சாலையை சீரமைக்க வேண்டும். தாழைக்குடி காட்டாற்று பாலம் சாலையை சீரமைக்க வேண்டும். சத்தியேந்திரன்:

    எண்கண் வெட்டாறு ரெகுலேட்டர் அருகே ஆகாயத் தாமரை செடிகள் தேங்கியுள்ளது. அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலலித்து பேசிய துணைத் தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது, உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு தகுந்தாற்போல் சாலைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

    கொரடாச்சேரி வட்டாரத்தில் மக்கள் நலன் கருதி 65 குடிநீர் மேல் தேக்க தொட்டி தேர்வு செய்து, தற்போது ரூ.3 கோடி மதிப்பில் 25 குடி நீர் மேல் தேக்க தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது என்றார்.

    கூட்டத்தில் ஒன்றியப் பொறியாளர் ரவீந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ராணி எலிசபெத் உள்ளிட்ட இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    முடிவில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    Next Story
    ×