search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே உழைத்தவர் கருணாநிதி-கனிமொழி எம்.பி. பேச்சு
    X

    கூட்டத்தில் கனிமொழி எம்.பி., பேசியபோது எடுத்த படம். அருகில் ராஜா எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தங்கவேலு உள்பட பலர் உள்ளனர்.

    வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே உழைத்தவர் கருணாநிதி-கனிமொழி எம்.பி. பேச்சு

    • மு.க.ஸ்டாலினின் ஆட்சி என்பது கலைஞர் ஆட்சியின் நீட்சி என்றே சொல்லலாம்.
    • தி.மு.க.வை பா.ஜ.க. ஒரு போதும் அச்சுறுத்த முடியாது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் கரிவலம் வந்த நல்லூர் வடக்குரத வீதியில் நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் மதி மாரிமுத்து தலைமை தாங்கினார்.

    மோகன்குமார், அழ கையா ரவி, ஸ்தோவான், சண்முகத்தாய், ஈஸ்வரன், தங்கவேல், முருகேசன், மாரியப்பன், கனகசபை , கருணாநிதி முத்துக்குமார வேல் , பத்மநாபன், பஞ்சாயத்து தலைவர்கள் தினேஷ் சரவண பெருமாள் மற்றும் கார்த்தி, மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் தேவா என்ற தேவதாஸ் வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் யூ.எஸ்.டி. சீனிவாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி., முன்னாள் அமை ச்சர் தங்கவேலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தனது வாழ்நாள் முழுவதும் பொது மக்களுக்காகவே வாழ்ந்தவர் கலைஞர். தமிழ்நாட்டில் மக்களுக்காக வாழ்ந்த தலைவர் கலைஞர். 2 தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கல்வியில் சாதனை புரிந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 மாணவர்களை அழைத்து பாராட்டும் பொழுது அவர்கள் கலைஞரால்தான் எங்கள் பெற்றோர்கள் படித்தார்கள். அதனால் தான் நாங்களும் படிக்கும் வாய்ப்பினை பெற்று இருக்கிறோம் என பெரு மிதத்துடன் தெரிவித்தனர். பள்ளிகளில் கணினி பாடத்தை அறிமுகப் படுத்தியவர் கலைஞர். அதனால் பல மாணவர்கள் கலைஞரால் உருவாக்கப்பட்ட டைட்டில் பார்க்கில் பணிபுரிந்து வாழ்க்கையில் முன்னேறி உள்ளனர். இன்றைய தலைமுறை இளைஞர்களும் கலைஞரால் பயன் பெற்றுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

    அதே வழியில் திராவிட மாடல் ஆட்சி செய்து வரும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆட்சி என்பது கலைஞர் ஆட்சியின் நீட்சி என்றே சொல்லலாம்.

    பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநில அரசுகளை அவர்கள் முடிந்தவரை தங்களிடம் உள்ள துறை களை ஏவி மாநில அரசுகளை விரட்டி யும், மிரட்டியும் வருகிறது. தி.மு.க.வை பா.ஜ.க. ஒரு போதும் அச்சுறுத்த முடியாது. 100 நாள் வேலை திட்டத்தில் பணி புரிபவர்களுக்கு ஊதியம் முறை யாக வழங்கப்பட வில்லை. மேலும் தற்போது மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் பிரதமர் வெளிநாடு பயணங்கள் சென்று வருகின்றார்.

    மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி உள்ளார்கள் என்பது உண்மை. தற்போது இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கட்சிகளை ஒருங்கி ணைத்து செயல்பட்டு வருகின்றார். சில தினங்க ளுக்கு முன்பு பாட்னாவில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தின் பலனாக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதானி மற்றும் அம்பானிகள் போன்றவர்களுக்கு மட்டும் உள்ள பா.ஜ.க. ஆட்சியை அகற்றி சாதாரண மக்களுக்கும் பல்வேறு திட்டங்கள் கிடைக்க கூடிய மக்களாட்சியாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

    தமிழ்நாட்டின் துணை யோடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஒருங்கி ணைப்பில் கண்டி ப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும். இப்போதைய பா.ஜ.க. அரசு மாநிலங்களில் மக்களை பிரித்து வன்முறை களை தூண்டி விட்டு குளிர் காய நினைக்கின்றது . வரும் நாடாளுமன்ற தேர்தலில் சாதி, மதத்தால் அரசியல் செய்துவரும் பா.ஜ.க.வை அகற்றிவிட்டு மக்களுக்கான ஆட்சி அமைய அனைவரும் இதற் கான பணியை இப்பொ ழுதே தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து பயனாளி களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு,மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட அவை தலைவர் பத்மநாதன்,மாவட்ட துணை செயலாளர்கள் புனிதா, ராஜதுரை ,பொது க்குழு உறுப்பி னர்கள் பராசக்தி, வேல்சாமி பாண்டியன், மாரிச்சாமி, மகேஸ்வரி ,ஒன்றிய செயலாளர்கள்

    பூசைபாண்டியன் , கடற்கரை, கிறிஸ்டோபர், பெரிய துரை, பொன் முத்தையா பாண்டியன், ராமச்சந்திரன், சேர்ம துரை,நகர செயலாளர்கள் அந்தோணிராஜ், பிரகாஷ், மாவட்ட மகளிர் அணி தலைவர் அன்புமணி கணேசன்,மாவட்ட அணி அமைப்பா ளர்கள் காசி ராஜன், கிப்ட்சன்,சந்திரன் மற்றும் தொ.மு.ச. மண்டல அமைப்பு செயலாளர் மைக்கேல் நெல்சன், மின்வாரிய தொ.மு.ச. திட்ட செயலாளர் மகாராஜன், வாழைக்காய் துரைப்பாண்டியன், ஒன்றிய இளைஞர் அணி யோகேஷ் குமார் ,டாஸ்மாக் நிர்வாகி கள் பெர்ணா ன்டோ ,மனோகரன், மணி, சிவாஜி, பிரகாஷ் , அன்சாரி, கணேஷ், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட மகளிர் அணி செயலாளர் சிவசங்கரி நன்றி கூறினார்.

    Next Story
    ×