என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரோகிணி பொறியியல் கல்லூரியில் எம்.பி.ஏ. சங்க தொடக்க விழா
    X

    ரோகிணி பொறியியல் கல்லூரியில் எம்.பி.ஏ. சங்க தொடக்க விழா

    • ல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர்.
    • சங்கத்தின் செயல்பாடுகளை மேற்கொள்ள, செயற்குழு உருவாக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் எம்.பி.ஏ. சங்க தொடக்க விழா நடை பெற்றது. கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.

    பாரத் ஹெவி எலக்ட் ரிக்கல்ஸ் நிறுவன மனித வள வணிக பங்குதாரர் அப்ரார் வஸ்தா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் அவர் "வணிக வெற்றிக்கான மனப் பான்மையை உரு வாக்குதல்" என்ற தலைப்பில் தொழில்நுட்ப விளக் கத்தை வழங்கினார். இரண்டாம் ஆண்டு எம்.பி.ஏ. மாணவி லின்சி புளோரன்ஸ் வரவேற்றார். தலைவர் உரையை முதல் வர் டாக்டர் ராஜேஷ் வழங்கினார். டாக்டர் பிரேம்சங்கரி சிறப்புரையாற்றினார். சங்கத்தின் செயல்பாடுகளை மேற்கொள்ள, செயற்குழு உருவாக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அவர்களின் பதவிக் காலத்தில் தங்கள் கடமைகளையும், பொறுப்புகளை யும் நிறைவேற்றுவார்கள்.

    சங்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறுதி ஆண்டு எம்.பி.ஏ. வகுப்பில் இருந்து ஒரு தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோர் குழுவில் உள்ளனர். சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அஜிஷா, சங்க பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். துறைத்தலைவர் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். அட்லின் ஜினோ நன்றி கூறினார்.

    Next Story
    ×