என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் படுகாயம்
- சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் மோதியது
- புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே வேங்காடு வடக்கு பகுதி மொண்டிவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் அசரி. இவரது மனைவி பால்தங்கம் (வயது 52).
நேற்று மாலை இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது விழுந்தயம் பலம் பகுதி சேம்பழஞ்சி என்ற இடத்தை சேர்ந்த முருகேசன் மகன் பத்ம குமார் (20) ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் பால்தங்கம் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காஞ்சிரகோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சிசைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக பால்தங்கம் மகன் அஜித் (28) என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






