search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீ விபத்தில் படுகாயம் - விஜய் வசந்த் எம்.பி. உதவி
    X

    தீ விபத்தில் படுகாயம் - விஜய் வசந்த் எம்.பி. உதவி

    • தீக்காயம் அடைந்தவர்கள் படுப்பதற்கு வசதியான மருத்துவ குணம் கொண்ட மெத்தைகளை வழங்கினார்.
    • 8 பேருக்கு தீ காயம் ஏற்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    நாகர்கோவில் :

    தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ மெத்தையை விஜய் வசந்த் எம்.பி. வழங்கினார்.

    பார்வதிபுரத்தில் டீ கடையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் கடைக்கு டீ குடிக்க வந்தவர்கள், வேடிக்கை பார்த்தவர் என 8 பேருக்கு தீ காயம் ஏற்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்த குமரி எம்.பி., விஜய் வசந்த் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    பின்னர் தீ காயம் பட்டவர்களுக்கான தேவையான உதவிகளை செய்த அவர், தீக்காயம் அடைந்தவர்கள் படுப்பதற்கு வசதியான மருத்துவ குணம் கொண்ட மெத்தைகளை வழங்கினார்.

    இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவர் ரெனி மோள் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×