search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சலில் பயங்கர சூறைக்காற்று - விசைபடகுகள், கட்டு மரங்கள் 2-வது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை
    X

    குளச்சலில் பயங்கர சூறைக்காற்று - விசைபடகுகள், கட்டு மரங்கள் 2-வது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை

    • குமரி கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 45முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்
    • மீனவ கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் குமரிக்கடல் மற்றும் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் போதிய மீன்கள் கிடைக்காததால் கடந்த 2 நாட்களாக மீன்பிடி தொழிலை கைவிட்டு கரை திரும்பியுள்ளனர்.

    இந்த நிலையில் குமரி கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 45முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எனவே அந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. நேற்று முதல் குமரிக் கடல் மற்றும் மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வந்த நிலையில் இன்றும் சூறைக்காற்றுடன் கடல் சீற்றத்துடனே காணப்படு கிறது.

    இதனால் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் 60-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் இவர்கள் படகுகளை துறை முகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

    Next Story
    ×