search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கலெக்டர் ஸ்ரீதர் இன்று காலை திடீர் ஆய்வு
    X

    சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கலெக்டர் ஸ்ரீதர் இன்று காலை "திடீர்" ஆய்வு

    • துறைமுக வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுரை
    • ஜூன் 14-ந்தேதியுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைகிறது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த விசைப்படகுகள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம். கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சின்னமுட்டம் துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தில் கரையோரமாக நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ஒரு சில விசைப்படகுகளை மீனவர்கள் கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த மாதம் ஜூன் 14-ந்தேதியுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைகிறது. அன்று முதல் மீன் பிடிக்க செல்வதற்காக விசைப்படகு மீனவர்கள் தங்களது வலைகளையும், படகுகளையும் தயார்படுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் இன்று காலை சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு "திடீர்"என்று வந்தார். அவர் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை சுற்றி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது துறைமுக வளாக பகுதியை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    சின்ன முட்டம் துறை முகத்தில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்யும் படியும் அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது குமரி மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்னமுட்டம் மீன் துறை உதவி இயக்குனர் விர்ஜில் கிறாஸ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×