search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி கடல் பகுதியில் 2-வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை
    X

    கன்னியாகுமரி கடல் பகுதியில் 2-வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை

    • “சாகர்கவாச் ஆபரேஷன்” என்ற பாதுகாப்பு ஒத்தி கையை 2 நாட்கள் நடத்தினர்.
    • 10-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் போலீசார் இரவு- பகலாக அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள்

    கன்னியாகுமரி :

    தமிழ்நாட்டில் 13 மாவட்டங்கள் கடலோர பகுதியில் உள்ள மாவட் டங்கள் ஆகும். இதனால் இந்த மாவட்டங்களில் கடல் வழியாக படகு மூலம் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க அடிக்கடி கடலில் படகு மூலம் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம்.

    அதேபோல தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு போலீசார், இந்திய கடலோர காவல் படை, இந்திய கடற்படை, மீன்வளத்துறை மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து தமிழ கத்தின் கடலோரப் பகுதியில் "சாகர்கவாச் ஆபரேஷன்" என்ற பாதுகாப்பு ஒத்தி கையை 2 நாட்கள் நடத்தினர்.

    கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு போலீசார் 2 அதி நவீன ரோந்து படகு மூலம் பாதுகாப்பு ஒத்திகையில் 2-வது நாளாக ஈடுபட்டனர். கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் இந்த பாது காப்பு ஒத்திகை நடந்தது. சின்ன முட்டம் துறை முகத்தில் இருந்து கூடங்கு ளம் கடல் பகுதி வரை ஒரு குழுவினரும், குளச்சல் கடல் பகுதி வரை ஒரு குழுவினரும் அதி நவீன படகில் சென்று கண் காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இது தவிர கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 72 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்து உள்ள 48 கடற்கரை கிராமங்களில் போலீசார் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து ஜீப் மூலம் போலீ சார் கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி கண்கணித்த னர். நெல்லை, குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள 10-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் போலீசார் இரவு- பகலாக அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள். அதேபோல லாட்ஜ்களிலும் சந்தேகப் படும் படியான நபர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்று உள்ளூர் போலீசாரும் தீவிர சோதனை நடத்தினார்கள்.

    Next Story
    ×