search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 ஆண்டுகளுக்கு பின் ரூ.35 லட்சம் செலவில் வெள்ளமோடி சானல் சீரமைப்பு
    X

    2 ஆண்டுகளுக்கு பின் ரூ.35 லட்சம் செலவில் வெள்ளமோடி சானல் சீரமைப்பு

    • போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வந்தனர்
    • வெள்ளிமலை பாரதிய ஜனதா சார்பாக உண்ணாவிரத போராட்டமும் நடந்தது.

    கன்னியாகுமரி :

    உரப்பனவிளையில் இருந்து வெள்ளமோடி வழியாக முட்டம் செல்லும் சானலில் வெள்ளமோடி பாலம் அருகில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீரினால் சேதமடைந்து போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வந்தனர். இதனை சரிசெய்ய வெள்ளிமலை பேரூராட்சி தலைவரும், முட்டம் இரட்டை க்கரை கிளைகால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலை வருமான பாலசுப்ரமணியன் பலமுறை தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளையும், பொதுப் பணித்துறை அதிகாரிகளையும் நேரில் சந்தித்து மனு அளித்தார். மேலும் வெள்ளிமலை பாரதிய ஜனதா சார்பாக உண்ணாவிரத போராட்டமும் நடந்தது. இதன் காரணமாக அந்த சானல்கரை யினை சரிசெய்யும் பணி தொடங்கியது. இதை வெள்ளிமலை பேரூராட்சி தலைவர் பாலசுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப்ப ணித்துறை அதிகாரிகள், பஞ். துணைத்தலைவர் கார்த்தி கேயன், ஊர் தலைவர் கிருஷ்ணசாமி ஆசான், பாரதிய மாநில பொதுக்குழு உறுப்பி னர் ரெத்தினமணி, மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவர் பிரபு, வெள்ளிச்சந்தை பாரதிய ஜனதா தலைவர் துரைசிங்கம், மாவட்ட பொருளாதார பிரிவு செயலாளர் சந்திரகுமார், ஒன்றிய பொது செயலாளர் குமார், பாரதிய ஜனதா பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×