search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருங்கல் பகுதியில் நாளை மின்தடை
    X

    கருங்கல் பகுதியில் நாளை மின்தடை

    • பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என குழித்துறை மின் வினியோக செயற்பொறியாளர் குறிப்பிட்டுள்ளார்.
    • காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது

    கருங்கல் :

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக குழித்துறை கோட்ட செயற்பொறியாளர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    குழித்துறை கோட்டத்திற் குட்பட்ட கருங்கல் துணை மின் நிலையத்தில் நாளை (26-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால் அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை கருங்கல், பாலூர், திப்பிறமலை, பூட்டேற்றி, கொட்டேற்றிகடை, தெருவுக்கடை, செந்தறை, மேல்மிடாலம், மிடாலம், நட்டாலம், எட்டணி, இட விளாகம், பள்ளியாடி, பாறக்கடை, குழிக்கோடு, முருங்கவிளை, செங்கோணம், முள்ளங்கினாவிளை, கஞ்சிக்குழி, காட்டுக்கடை, கருமாவிளை, வெள்ளி யாவிளை, படிவிளை, மானான்விளை, பெருமாங்குழி, காக்கவிளை, ஒளிப் பாறை, மீறி, கல்லடை, ஹெலன் காலனி ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது.

    மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின்கம்பங்களுக்கும் மின் பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் மற்றும் மரங்கள் அகற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என குழித்துறை மின் வினியோக செயற்பொறியாளர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×