search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழ மணக்குடி மீனவர் ெகாலை வழக்கு: சகோதரர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு
    X

    கீழ மணக்குடி மீனவர் ெகாலை வழக்கு: சகோதரர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு

    • வீட்டை சகோதரி ராதிகா குடும்பத்தினர் அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது
    • ராதிகாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் ஆத்திரமடைந்தனர்.

    நாகர்கோவில்: குமரி மாவட்டம் கீழமணக்குடி பகுதியைச்சேர்ந்தவர் டீசன் என்ற கென்சலா கிரேசி (வயது 60),மீனவர். இவரது சகோதரியின் மகன் தினேஷ் குமார். இவரது வீட்டை சகோதரி ராதிகா குடும்பத்தினர் அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு டீசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் டீசன் மீது ராதிகாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் ஆத்திரமடைந்தனர்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று டீசன், வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது ராதிகாவின் கணவர் பிரபு அவரது சகோதரர் ராஜ் என்ற ஸ்டாலின்ராஜ் ஆகியோர் சரமாரியாக தாக்கினார்கள். இதில் டீசன் பரிதாபமாக இறந்தார். இதை தடுக்க வந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.பிரபு ராஜ் மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர் .பின்னர் இவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பிரபு,ராஜ் உள்பட 5 பேரும் ஆஜரானார்கள். நீதிபதி ஜோசப் ஜாய் இன்று தீர்ப்பு கூறினார். கைது செய்யப்பட்ட பிரபு,ராஜ் இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டது. இருவருக்கும் ஆயுள் தண்டனையும் ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

    அரசு தரப்பில் வழக்க றிஞர் மதியழ கன் ஆஜரானார். பிரபு,ராஜ் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து போலீசார் அவர்களை ஜெயிலில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×