search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் வக்கீல் சங்கத்தில் சட்டப் பயிற்சி முகாம்
    X

    நாகர்கோவில் வக்கீல் சங்கத்தில் சட்டப் பயிற்சி முகாம்

    • நாகர்கோவில் நீதிமன்ற இலவச சட்ட உதவி மைய செயலாளர் நீதிபதி நம்பிராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் மரிய ஸ்டீபன் உள்பட 100-க்கும் மேற்பட்ட இளம் வக்கீல்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில் வக்கீல் சங்கத்தில் வக்கீல்களுக்கான சட்டப் பயிற்சி முகாம் நடைபெற்றது. வழக்கறிஞர் சங்க தலைவர் அசோக் பத்மராஜ் தலைமை தாங்கினார். நாகர்கோவில் நீதிமன்ற இலவச சட்ட உதவி மைய செயலாளர் நீதிபதி நம்பிராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்த வக்கீல்களுக்கான சட்டப் பயிற்சி வகுப்பை நிறைவேற்று மனுக்கள் சம்பந்தமாக என்ற தலைப்பில் நாகர்கோவில் முதலாவது சார்பு நீதிபதி முருகன் அனைத்து வக்கீல்க ளும் தெளிவு பெறும் வண்ணம் விளக்கினார்.

    இதில் மூத்த வக்கீல்கள் ரெத்தினசுவாமி, தனிஸ்லாஸ், நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் மரிய ஸ்டீபன் உள்பட 100-க்கும் மேற்பட்ட இளம் வக்கீல்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    Next Story
    ×