search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்து வட்டி வழக்கு: நாகர்கோவில் கோர்ட்டில் காசி இன்று ஆஜர்
    X

    கந்து வட்டி வழக்கு: நாகர்கோவில் கோர்ட்டில் காசி இன்று ஆஜர்

    • போலீசார் வழக்குப்பதிந்து கடந்த 2020-ம் ஆண்டு காசியை கைது செய்து விசாரணை நடத்தினர்
    • போலீசாரின் விசாரணையில் அவர் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம்பெண்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் பழகி காதலிப்பதாக ஏமாற்றி, பண மோசடி

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் காசி(வயது 28). இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் என்ஜினீயர், நாகர்கோவிலை சேர்ந்த இளம்பெண் ஆகியோர் பாலியல் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கடந்த 2020-ம் ஆண்டு காசியை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் காசி மீது மேலும் பல பெண்கள் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் பாலியல் தொல்லை, கந்து வட்டி, போக்சோ உள்ளிட்ட 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 6 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    போலீசாரின் விசாரணையில் அவர் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம்பெண்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் பழகி காதலிப்பதாக ஏமாற்றி, பண மோசடி செய்தது மட்டுமின்றி பாலி யல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டியது தெரிய வந்தது.

    இதையடுத்து காசி தொடர்பான வழக்குகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மேலும் அவரது லேப்டாப்பில் நூற்றுக்கணக்கான இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள் இருந்தன. இந்த வழக்கில் காசிக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

    மேலும் வெளிநாட்டில் உள்ள மற்றொரு நண்பரை கைது செய்யும் நடவ டிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    வழக்கு தொடர்பான தடயங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்க பாண்டியனும் கைது செய்யப்பட்டார். காசி மற்றும் அவரது தந்தை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். தனக்கு ஜாமீன் வழங்குமாறு மதுரை ஐகோர்ட்டில் காசியின் தந்தை தாக்கல் செய்த மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 3-வது முறையாக நேற்று ஜாமீன் கேட்டு மீண்டும் அவர் மனுதாக்கல் செய்தார்.

    மனு விசாரித்த மதுரை ஐகோர்ட்டு காசியின் தந்தை தங்கபாண்டியனுக்கு ஜாமீன் வழங்கியது

    இந்த நிலையில் ஏற்கனவே காசியின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள கந்துவட்டி வழக்கு தொடர்பான விசாரணை இன்று நாகர்கோவிலில் உள்ள 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது.‌ விசாரணைக்காக காசி இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.

    இந்த கந்து வட்டி வழக்கில் ஏற்கனவே 34 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு இருந்த நிலையில் 35-வது சாட்சியத்திடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    Next Story
    ×