என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குளச்சல் அருகே 3 வயது சிறுமியிடம் நகை பறிப்பு
- மோட்டார் சைக்கிளில் வந்தவன் துணிகரம்
- சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்
கன்னியாகுமரி :
குளச்சல் அருகே கோடிமுனை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ஹென்றி ஆஸ்டின் (வயது 37), மீன் பிடித்தொழிலாளி.
இவரது மனைவி டெனிலா (33), நேற்று தனது 3 வயது பெண் குழந்தையுடன் குறும்பனை திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் மகள் திருமணத்திற்கு சென்றிருந்தார். மதிய வேளையில் மண்டபத்தின் முன்பு உள்ள மைதானத்தில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது 25 வயது மதிக்கத் தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மண்டபம் நோக்கி வந்தார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த டெனிலாவின் 3 வயது மகள் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்தார்.
இதை பார்த்தவர்கள் சப்தமிட்ட படியே வாலிபரை பிடிக்க முயன்ற னர். ஆனால் அவர் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டார். இதனால் திருமண மண்டபம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து குளச்சல் போலீசில் டெனிலா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். திருமண மண்டபம் முன்பு சிறுமியிடம் செயின் பறித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்