search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறக்கை அருகே முத்தாரம்மன் கோவிலில் நகை-பொருட்கள் கொள்ளை
    X

    பறக்கை அருகே முத்தாரம்மன் கோவிலில் நகை-பொருட்கள் கொள்ளை

    • கதவை உடைத்து மர்ம நபர்கள் துணிகரம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் பறக்கை அருகே உள்ள புல்லு விளையில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பூசாரியாக சமுத்திரராஜன் உள்ளார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பூஜைகளை முடித்து விட்டு கோவிலின் கதவை பூட்டி சென்றார். நேற்று காலை வழக்கம் போல் 7.30 மணி அளவில் பூஜை செய்வ தற்காக சமுத்திரராஜன் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் வெளிப்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கோவி லுக்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு முத்தாரம்மன் நெற்றியில் உள்ள 4 கிராம் எடை கொண்ட 2 தங்க பொட்டுகளும், 8 கிராம் எடை கொண்ட 2 தங்க தாலி செயினும், கோவிலில் இருந்த 8 வெண்கல குத்து விளக்குகளும் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து கோவில் நிர்வாகத்தின் தலைவர் நாகராஜனுக்கு அவர் தகவல் தெரிவித்தார். உடனடியாக கோவிலுக்கு வந்த அவர், சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் கோவில் முழுவதையும் சுற்றி பார்த்தனர். கொள்ளை சம்பவம் குறித்து கூறப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    இதற்கிடையில் அந்த பகுதியில் உள்ள பத்திர காளியம்மன் கோவிலின் முன்பக்க கதவையும் கொள்ளையர்கள் உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் கதவை உடைக்க முடியாததால் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர். 2 கோவில்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×