search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் கவிமணி பள்ளியில் ரூ.72 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு
    X

    நாகர்கோவில் கவிமணி பள்ளியில் ரூ.72 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

    • மேயர் மகேஷ் பங்கேற்பு
    • வல்லன்குமாரன்விளை பள்ளியில் ரூ.30 லட்சம் செலவில் 2 வகுப்பறை கட்டிடங்கள் திறக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில் :

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்பட்ட அமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து நாகர்கோவில் கவிமணி பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ரூ. 72 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை யடுத்து 5 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது.

    இதனை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கவிமணி பள்ளியில் நடந்த விழாவில் மேயர் மகேஷ் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி புதிய வகுப்பறை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் திட்ட அதிகாரி பாபு, துணை மேயர் மேரி பிரின்சி லதா, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், தி.மு.க. நிர்வாகிகள் அருண் காந்த், சரவணன், தொடக்க கல்வி அலுவலர் தாம்சன், உதவி அதிகாரி எட்வின் ஜேக்கப், பள்ளி தலைமை ஆசிரியர் கமலா உள்பட பலர் கலந்து கொண்டனர். புதிய வகுப்ப றையில் மாணவ-மாணவி கள் எளிதில் கல்வி கற்றுக் கொள்ள வசதியாக வரைபடங்கள் வரையப் பட்டிருந்தது.

    தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் சம்பந்தப் பட்ட வரை படங்கள் ஒவ்வொரு வகுப்ப றையிலும் வரையப்பட்டு உள்ளது. இதேபோல் வல்லன்குமாரன்விளை பள்ளியில் ரூ.30 லட்சம் செலவில் 2 வகுப்பறை கட்டிடங்கள் திறக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில் மாநக ராட்சியில் 44-வது வார்டுக்குட்பட்ட சுவாமி விவேகானந்தர் தெருவில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம், 33-வது வார்டுக்குட்பட்ட காந்தி நகரில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம், 46-வது வார்டுக் குட்பட்ட வடக்கு சூரங்குடி பள்ளி வாசல் முன்புள்ள தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம், 47-வது வார்டு வள்ளன்குமாரவிளை பகுதி யில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தார் தளம், 40-வது வார்டுக்குட்பட்ட பைத்தும் மால் நகரில் ரூ.5 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி, 26-வது வார்டு வசந்த் நகர் எம்.கே. தெருவில் ரூ10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்

    Next Story
    ×