search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் அருகே ஓட்டல் உரிமையாளர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    திருவட்டார் அருகே ஓட்டல் உரிமையாளர் தூக்கு போட்டு தற்கொலை

    • சொந்தமாக செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்தார்

    கன்னியாகுமரி :

    திருவட்டார், அருகே உள்ள குமரன்குடி, மேக்கா மண்டபம் பகுதியை சேர்ந்தவர் அஜிஸ் (வயது 55).

    இவர் அழகியமண்டபம் பகுதியில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும் அப்சல்,அன்சில் என்ற 2 மகன்களும் உள்ளனர். அன்சில் அந்த பகுதியில் சொந்தமாக செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த 5 ஆண்டுகளாக அஜிஸ் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனைக்கு சென்று சிகிச்சையும் பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இவரின் படுக்கை அறை வெகு நேரமாக திறக்கப்படவில்லை. உடனே மகன் அன்சில் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை திறந்து பார்க்கும் போது அஜிஸ் மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்தார்.

    உடனே அவரை கீழே இறக்கி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது அஜிஸ் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

    இது சம்பந்தமாக அன்சில், திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலிசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×