search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிறிஸ்துமஸ்-புத்தாண்டையொட்டி கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
    X

    கிறிஸ்துமஸ்-புத்தாண்டையொட்டி கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

    • காலையில் வரும் அவர்கள் மாலை வரை நகர் பகுதியிலேயே சுற்றி வருவதால், ஓட்டல் உள்ளிட்ட பிற நிறுவனங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
    • மீனாட்சிபுரம், அண்ணா பஸ்நிலையம், செம்மாங்குடி ரோடு, வடசேரி பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக பகுதி உள்பட பல பகுதி களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது

    நாகர்கோவில், டிச. 24-

    உலகம் முழுவதும் நாளை (25-ந் தேதி) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடந்த ஒரு வார காலமாகவே கிறிஸ்தவ மக்கள் பண்டிகையை வரவேற்கும் விதமாக வீடுகளில் வண்ண வண்ண ஸ்டார்களை பறக்க விட்டும், மின் அலங்காரம் செய்தும் அனைவரையும் கவர்ந்து உள்ளனர்.

    நாகர்கோவில் கடை வீதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஜவுளி ரகங்களை தேர்வு செய்யவும், ஸ்டார்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கவும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் நாகர்கோவிலுக்கு தினமும் மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    காலையில் வரும் அவர்கள் மாலை வரை நகர் பகுதியிலேயே சுற்றி வருவதால், ஓட்டல் உள்ளிட்ட பிற நிறுவனங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. நாளை பண்டிகை என்பதால், இன்று கடை வீதிகளில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகமாக இருந்தது.

    குறிப்பாக மீனாட்சிபுரம், அண்ணா பஸ்நிலையம், செம்மாங்குடி ரோடு, வடசேரி பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக பகுதி உள்பட பல பகுதி களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.ஆயத்த ஆடை கடைகள், சாலையோர வியாபாரிகள் போன்றோரை மக்கள் முற்றுகையிட்டு உடைகளை வாங்கினர். இதன் காரணமாக பல பகுதிகளிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள கேக் கடைகளிலும் இன்று மக்கள் அதிக அளவில் திரண்டனர். அவர்கள் ஆர்வத்துடன் பல வகை கேக்குகளை வாங்குவதில் போட்டி போட்டனர். அதற்கேற்றார் போல் அனைத்து கேக் கடைகளிலும் புதிய ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

    வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பண்டிைகயை கொண்டாட குமரி மாவட்டம் வந்தவர்கள் மற்றும் பொருட்கள் வாங்க மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து நாகர் கோவிலுக்கு ஏராளமா னோர் வந்ததால், பஸ் மற்றும் ரெயில் நிலையங்க ளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதையொட்டி பொது மக்களின் பாதுகாப்புக்காக போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பஸ் நிலையம் மற்றும் மக்கள் கூடும் சாலைகளில் மப்டி உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×