search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் இன்று பிளஸ்-2 தேர்வை 23 ஆயிரத்து 918 மாணவ-மாணவிகள் எழுதினர் - பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு
    X

    குமரி மாவட்டத்தில் இன்று பிளஸ்-2 தேர்வை 23 ஆயிரத்து 918 மாணவ-மாணவிகள் எழுதினர் - பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு

    • நாகர்கோவில் 11 ஆயிரத்து 88 பேரும், மார்த்தாண்டம் 11 ஆயிரத்து 830 பேரும் தேர்வினை எழுதினர்.
    • தீயணைப்பு துறையினரும் தேர்வு மையங்களில் தயார் நிலையில் இருந்தனர்

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) காலை தொடங்கியது.

    குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 22 ஆயிரத்து 918 மாணவ-மாணவிகள் எழுதினர். நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 88 பேரும், மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 830 பேரும் தேர்வினை எழுதினர்.

    இதற்காக 82 தேர்வு மையங்களும், கல்வி மாவட்டத்திற்கு தலா ஒரு தனித் தேர்வு மையமும் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வுக்காக மாணவ-மாணவிகள் இன்று காலை தங்களுக்கான தேர்வு மையத்திற்கு வந்தனர். அவர்களை ஆசிரிய-ஆசிரியைகள் வரவேற்று தேர்வு குறித்து விளக்கினர்.

    பிரார்த்தனை

    தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்காக பள்ளி களில் பிரார்த்தனை நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவ-மாணவிகள் தங்கள் நண்பர்களுடன் தேர்வு பற்றி விவாதித்தனர். தேர்வு மையத்திற்குள் செல்லும் வரை சிலர் புத்தகங்களை எடுத்து பாடங்கள் படித்து நினைவூட்டிக் கொண்டனர்.

    ஏற்கனவே தேர்வு மையங்களில், மாணவ-மாணவிகளின் ஹால் டிக்கெட் எண்கள் இருக்கை களில் எழுதப்பட்டு இருந்தது. அதனை பார்த்து மாணவ-மாணவிகள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். தொடர்ந்து வினாத்தாள்கள் வழங்கப்பட்டு தேர்வுகள் நடந்தன.

    குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் 160 பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டு உள்ளது. மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் நிலையான பறக்கும் படையினர் 56 பேரும், பறக்கும் படையினர் 24 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்கும் பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.பறக்கும் படையினர் இன்று தேர்வு மையங்களுக்கு அதிரடியாக சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்து அல்லது அசம்பாவிதம் நேர்ந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் தீயணைப்பு துறையினரும் தேர்வு மையங்களில் தயார் நிலையில் இருந்தனர். தேர்வு மையங்களில் முதலுதவி ஏற்பாடுகள், விடைத்தாள் பாதுகாக்கப்படும் பகுதி யில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு உள் ளிட்ட ஏற்பாடுகளும் செய் யப்பட்டு உள்ளன.

    அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி வரை தேர்வுகள் நடக்கிறது. மேலும் நாளை (14-ந் தேதி) பிளஸ்-1 தேர்வும் தொடங்குகிறது.

    Next Story
    ×