search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் பள்ளி கலவரத்தில் மேலும் 5 பேர் கைது
    X

    சின்னசேலம் பள்ளி கலவரத்தில் மேலும் 5 பேர் கைது

    • கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து வருகின்றனர்.
    • உளுந்தூர்பேட்டை அருகே நத்தகாளி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் வன்முறையில் ஈடுபட்டு பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியதாக கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    அதன்படி வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்து கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவு செய்தது மற்றும் கலவரத்தில் கலந்து கொண்டதாக கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே டி.ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் (22), திட்டக்குடி அருகே எழுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜ், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நத்தகாளி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் மற்றும் வன்முறையில் ஈடுபட்டு பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியதாகவும் கைது செய்தனர்.

    இதேபோல திட்டக்குடி அருகே டி.ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த முத்தையா (23) கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சர்புதீன் (45) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதனால் கைது எண்ணிக்கை 352 ஆக உயர்ந்து உள்ளது.

    Next Story
    ×