search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு கடன் வழங்கும் விழா
    X

    தென்காசி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு கடன் வழங்கும் விழா

    • சிறப்பு கடன் வழங்கும் விழா நன்னகரம் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது.
    • 7,213 விவசாயிகளுக்கு ரூ.90 கோடிக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கூட்டுறவு துறை மூலம் சிறப்பு கடன் வழங்கும் விழா நேற்று நன்னகரம் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது.

    இவ்விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் முன்னிலை வகித்தார். தென்காசி மண்டல இணைப்பதிவாளர் நரசிம்மன் வரவேற்று பேசினார்.

    விழாவில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழு கடன், விவசாய பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புகடன், அடமான கடன் மற்றும் சிறுவணிக கடன் உட்பட ரூ.2 கோடியே 23 லட்சம் மதிப்பில் 52 பயனாளி களுக்கு கடன்களுக்கான காசோலைகளை வழங்கி னார்.

    தொடர்ந்து கலெக்டர் ரவிச்சந்திரன் பேசியதா வது:-

    தென்காசி மாவட்டத்தில், 87 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 1 நகர கூட்டுறவு கடன் சங்கம், 4 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மற்றும் 2 வேளாண் விற்பனைச் சங்கங்கள் மற்றும் நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 16 கிளைகள் மூலமாக பல்வேறு வகை யான கடன்கள் வழங்கப் பட்டு வருகின்றன.

    விவசாயிகள், நகர்ப்புற மக்கள் மற்றும் பொருளா தாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய நலிவுற்ற மக்கள் அனைவரும் பயனடையும் வகையில் கூட்டுறவு இயக்கம் சேவை செய்து வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் தற்போது வரை 7,213 விவசாயிகளுக்கு ரூ.90 கோடிக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டில் கால்நடை பராமரிப்புக் கடனாக 4,686 நபர்பகளுக்கு ரூ.30 கோடி வழங்கப்ப ட்டுள்ளது.

    மேலும், தென்காசி மாவட்டத்தில் இதர வகை கடன்களாக நடப்பு நிதி யாண்டில் 89 மாற்றுத்திறனா ளிகளுக்கு ரூ.3,248 லட்சமும், 102 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.27,48 கோடியும் வழங்கப் பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வீடு அடமான கடனாக 43 நபர்க ளுக்கு ரூ.2150 லட்சமும் வழங்கப்பட்டு ள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் 4 மருந்தகங்கள் தொடங்கப் பட்டு குறைந்த விலையில் 20 சதவீதம் தள்ளுபடியில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்படுத்தப்படும் பொது சேவை மையங்கள் மூலமாக கிராம மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் தொடர்பான மின்னணு சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாண்டில் இதுவரை 45,818 சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இங்கு வருகை தந்துள்ள கூட்டுறவு நிறுவனங்களின் உறுப்பினர்கள் கூட்டுற வுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியா ளர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு கூட்டுறவு சங்கங்கள் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறும் சங்கத்திற்கு வருகை தரும் சங்க உறுப்பி னர்கள் மற்றம் வாடிக்கையா ளர்களின் நம்பிக்கையினை யும், பாராட்டினையும் பெறு கின்ற வகையில் உங்களின் பணிகள் சிறப்புடன் அமைய வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    இவ்விழாவில் சங்கரன்கோவில் சரகத் துணைப்பதிவாளர் திவ்யா, மேலகரம் பேரூராட்சி தலைவர் வேணி வீரபாண்டி யன், மேலகரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜீவா னந்தம், பேரூராட்சி மன்ற உறுப்பினர் சிங்கத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    துணைப்பதிவாளர் கார்த்திக் கவுதம் நன்றி கூறினார்.

    Next Story
    ×