என் மலர்
உள்ளூர் செய்திகள்

சோழவரத்தில் கவுன்சிலர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
- அத்திப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்.
- போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த அத்திப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (51) சோழவரம் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.
இவர் தற்போது அண்ணா நகரில் வசித்து வருகிறார். வாரம் ஒரு முறை இங்கு வந்து செல்வதுண்டு. இந்நிலையில் நேற்று முன்தினம் அத்திப்பேடு கிராம வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 2 பவுன் நகை, ரூ.5000 பணம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து சோழவரம் போலீஸ் நிலையத்தில் பிரகாஷ் புகார் கொடுத்ததர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






