என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

    • இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் திறந்து வைத்தார்.
    • முன்னாள் எம்.எல்.ஏ தனபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் மற்றும் பொது சேவை மையம் இணைந்து மத்திய அரசின் "ஸ்வச்தா பக்கவாடா" திட்டத்தின்கீழ் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 500லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநிர் சுத்திகரிப்பு இயந்திரங்களை அமைத்து அதன் மூலம் சுகாதாரமான குடிநீரை மக்களுக்கு வழங்கி வருகிறது. அவ்வகையில் புதுப்பட்டினம் உய்யாலிகுப்பம் மீனவர் பகுதியில் நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் காயத்ரி தனபால் கலந்துகொண்டு பொது மக்களுக்கு குடிநீர் வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ தனபால், முன்னாள் ஊராட்சி தலைவர் கலியபெருமாள், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×