search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அகணி கிராமத்தில் குறுவை தொகுப்பு திட்டம் தொடக்க விழா
    X

    குறுவை தொகுப்பு திட்ட தொடக்கவிழாவில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பேசினார்.

    அகணி கிராமத்தில் குறுவை தொகுப்பு திட்டம் தொடக்க விழா

    • விவசாய பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 1 ஏக்கருக்கு யூரியா, 45 கிலோ டிஏபி, 50 கிலோ பொட்டாஷ், 25 கிலோ வீதம் ரசாயன உரத்தை வழங்கினார்.
    • 75 ஏக்கருக்கு பயறு தொகுப்பும், 20 ஏக்கருக்கு எண்ணை வித்து தொகுப்பும் வழங்கப்படவுள்ளதாக வேளாண்மைத்துறையினர் தெரிவித்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே அகணி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் குறுவை தொகுப்பு திட்டத்திற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குனர் சேகர் குறுவை தொகுப்பு திட்டம் குறித்து விளக்கவுரையாற்றினார். விழாவில்சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பங்கேற்று 33 விவசாய பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 1 ஏக்கருக்கு யூரியா, 45 கிலோ டிஏபி, 50 கிலோ பொட்டாஷ், 25 கிலோ வீதம் ரசாயன உரத்தை வழங்கினார். சீர்காழி வட்டாரத்தில் 6500 ஏக்கருக்கு சுமார் 7100 விவசாயிகளுக்கு இலவசமாக ரசாயன உரம் வழங்கப்படவுள்ளதாகவும், 10 ஏக்கருக்கு சிறுதானிய தொகுப்பும், 75 ஏக்கருக்கு பயறு தொகுப்பும், 20 ஏக்கருக்கு எண்ணை வித்து தொகுப்பும் வழங்கப்படவுள்ளதாக வேளாண்மைத்துறையினர் தெரிவித்தனர். விழாவில் வேளாண்மை அலுவலர் சுகன்யா, உதவி வேளாண்மை அலுவலர் தமிழரசன், ஒன்றியக்குழு உறுப்பினர் ரிமா, ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன், தி.மு.க. நிர்வாகி முருகன் பங்கேற்றனர்.

    Next Story
    ×