search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டி பாலியல் பலாத்கார வழக்கில் தறித் தொழிலாளி சிக்கினார்
    X

    மூதாட்டி பாலியல் பலாத்கார வழக்கில் தறித் தொழிலாளி சிக்கினார்

    • எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட, இருபாளி ஊராட்சி, பூசாரிமூப்பன் வளவு பகுதியைச் சேர்ந்த 78 வயது மூதாட்டி தனியாக வசித்து வருகின்றார்.
    • வலுக்கட்டாயமாக அருகில் உள்ள புதர் பகுதிக்கு இழுத்துச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட, இருபாளி ஊராட்சி, பூசாரிமூப்பன் வளவு பகுதியைச் சேர்ந்த 78 வயது மூதாட்டி தனியாக வசித்து வருகின்றார்.

    மூதாட்டி கடந்த சனிக்கிழமை இருப்பாளி பகுதியில் உள்ள கந்த மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, இரவு தனியாக வீடு திரும்பினார். பூசாரிமூப்பன் வளவு பகுதியில் அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர், மூதாட்டியின் வாயைப் பொத்தி வலுக்கட்டாயமாக அருகில் உள்ள புதர் பகுதிக்கு இழுத்துச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    அவரை மீட்ட அவரது உறவினர்கள் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து அவர் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பூலாம்பட்டி போலீசார், 78 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபரை கண்டுபிடிக்க எடப்பாடி இன்ஸ்பெக்டர் சந்திரலேகா தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த தறி தொழிலாளியான தவசியப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×