search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழியில், அரசு பஸ் கண்ணாடி உடைப்பு; போதையில் வாலிபர்கள் வெறிச்செயல்
    X

    கல்வீச்சில் சேதமான அரசு பஸ்.

    சீர்காழியில், அரசு பஸ் கண்ணாடி உடைப்பு; போதையில் வாலிபர்கள் வெறிச்செயல்

    • வாலிபர்கள் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை பஸ்சின் முன் பக்க கண்ணாடி மீது தூக்கி வீசினர்.
    • முன் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியதில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து கொண்டல் வழியாக வடரங்கம் கிராமத்திற்கு அரசு நகர பஸ் சென்று கொண்டிருந்தது. சீர்காழி அடுத்த பழைய பாளையத்தை சேர்ந்த ரமேஷ் பேருந்து ஓட்டிச் சென்றார்.

    அதில் நடத்துனராக வள்ளுவக்குடியை சேர்ந்த அகோரமூர்த்தி பணியில் இருந்தார்.

    பஸ்சை மன்னங்கோயில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் கையில் வைத்திருந்த பீர் நிறைந்த பாட்டிலை பஸ்சின் முன் பக்க கண்ணாடி மீது தூக்கி வீசி சென்றனர்.

    இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்த நொறுங்கியதோடு பாட்டிலில் இருந்த பீர் மற்றும் கண்ணாடி துகள்கள் முழுவதும் ஓட்டுநர் ரமேஷ் மீது கொட்டியது.

    நிலை தடுமாறிய ஓட்டுனர் ரமேஷ் சாதுரியமாக ஓடிய பேருந்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    பஸ்சின் முன் பக்க கண்ணாடி திடீரென உடைந்து நொறுங்கியதில் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சின் கண்ணாடியை உடைத்த போதை கும்பலை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×