search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்கோடு  பகுதியில்  சாலையோர ஆக்கிரமிப்புகள்   அகற்றப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
    X

    பாலக்கோடு பேரூராட்சி சார்பில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றிய காட்சி.

    பாலக்கோடு பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

    • ஆக்கிரமிப்பு செய்து கடைகள், வணிக நிறுவனங்கள், நடை பாதை கடைகள் உள்ளிட்டவை இயங்கி வந்தன.
    • பேரூராட்சி தலைவர் முரளி முன்னிலையில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டன.

    பாலக்கோடு.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கடைத்தெரு, பஸ் நிலையம், எம்.ஜி.ரோடு, தக்காளிமண்டி வரை நீண்டகாலமாக நெடுஞ்சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள், வணிக நிறுவனங்கள், நடை பாதை கடைகள் உள்ளிட்டவை இயங்கி வந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மேலும் சாக்கடை கால்வாய்கள் முழுவதும் கான்கிரீட்டால் மூடப்பட்டுள்ளதால் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய முடியாமல் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசியது.

    இதனால் ஆக்கிரமிப்புக்களை அகற்றகோரி பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

    இந்நிலையில் கலெக்டர் சாந்தி உத்தரவின் பேரில் பேரூராட்சி தலைவர் முரளி முன்னிலையில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டன. இதில் துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், போலீசார் பாதுகாப்புடன் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுவதையும் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றினர்.

    மேலும் இதற்கு மேல் சாலைகளை ஆக்கிரமித்து செயல்படும் வணிக நிறுவனங்கள், நடைபாதை கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளனர்.

    சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலையை விரிவு செய்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது, இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×