search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சியில்அரசு பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி
    X

    ேமாட்டார் ைசக்கிள் மீது அரசு பஸ் மோதி நிற்கும் காட்சி.

    கள்ளக்குறிச்சியில்அரசு பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி

    • பூட்டை பகுதியைச் சேர்ந்த தஸ்தகீர் பாஷித் மகன் ஷேக் வாகித்
    • மோட்டார் சைக்கி ளை ஷேக்வாகித் ஓட்டினார், அணைதீன் பின்னால் அமர்ந்து வந்தார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பூட்டை ரோடு பகுதியைச் சேர்ந்த தஸ்தகீர் பாஷித் மகன் ஷேக் வாகித் (வயது 19) .இவர் சென்னை தரமணி யில் உள்ள அரசு பாலி டெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் அதே கல்லூரியில் பயிலும் இவரது நண்பரான சங்கரா புரம் அருகே வடகீரனூர் பகுதியைச் சேர்ந்த அணை தீன் (19) இருவரும் நேற்று இரவு சென்னையிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டி ருந்தனர். மோட்டார் சைக்கி ளை ஷேக்வாகித் ஓட்டினார், அணைதீன் பின்னால் அமர்ந்து வந்தார். இவர்கள் கள்ளக்குறிச்சி- துருகம் சாலையில் தனியார் மருத்து வமனை அருகே சென்று கொண்டிருந்தபோது. எதிரே கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ்ம மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த ஷேக் வாகித் சம்பவ இடத்தி லேயே பலியானார். அணை தீன் படுகாயம் அடைந்தார்.அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அணைதீன் மேல் சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து சேலம் மாவட்டம் ஆறகளூர் பகுதியைச் சேர்ந்த அரசு பஸ் டிவைர் சுந்தரம் (45) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×