search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராயபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
    X

    ராயபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

    • ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 53-வது வார்டில் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பு சார்பில் 1044 குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன.
    • நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் இருந்தது சட்டமன்ற உறுப்பினரின் தீவிர முயற்சியால் அது தற்போது பெறப்பட்டுள்ளது.

    சென்னை:

    ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 53-வது வார்டில் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பு சார்பில் 1044 குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. அப்பகுதி மக்களும் அருகில் உள்ள ராமதாஸ் நகர் மற்றும் காட்பாடா பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணியினை ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி அடிக்கல் நாட்டில் துவங்கி வைத்தார். இந்த கட்டிடம் 6 மாதத்திற்குள் பணி நிறைவடையும் என அப்போது சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

    நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் இருந்தது சட்டமன்ற உறுப்பினரின் தீவிர முயற்சியால் அது தற்போது பெறப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதி மின் வசதி உடற்பயிற்சி கூடம் திறந்த வெளி பூங்கா ஆகிய பணிகள் நடைபெறுவதை சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டார். அவருடன் மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு மேற்கு பகுதி செயலாளர் வ.பெ. சுரேஷ் மாமன்ற உறுப்பினர் வேளாங்கண்ணி வட்ட செயலாளர் கௌரீஸ்வரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×