search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்- 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு
    X

    ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்- 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு

    • தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக கல்குவாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக கல்குவாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து ஹாலோ பிளாக் உற்பத்தியாளா்கள் கூறியதாவது:-

    ஹாலோ பிளாக் உற்பத்தியாளா்கள் சங்கத்தினரின் போராட்டத்தால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 400 ஹாலோ பிளாக் உற்பத்திக் கூடங்களில் தினசரி ரூ.1.50 கோடி மதிப்பிலான உற்பத்தி இழப்பு ஏற்படும். இந்தத் தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் போ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா். உற்பத்தி நிறுத்த அறிவிப்பால் அவா்களுக்கு வேலை இழப்பு ஏற்படும்.

    அதே போல கட்டட கட்டுமானம் மற்றும் கட்டட பராமரிப்புப் பணிக்கு சில்லறை விலையில் கிடைக்கக்கூடிய எம்.சான்ட், பி. சான்ட், சிமென்ட், சிலாப், செங்கல், ஜல்லி போன்றவை கிடைப்பது தடைபடும். போராட்டம் நீடித்தால் கட்டடப் பணிகள் முழுமையாக முடங்கும் அபாயம் ஏற்படும் என்றனா்.

    Next Story
    ×