search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆவின் நிறுவனம் சார்பில் ½ லிட்டர், 1 லிட்டர் குடிநீர் பாட்டில்கள் விரைவில் விற்பனை
    X

    ஆவின் நிறுவனம் சார்பில் ½ லிட்டர், 1 லிட்டர் குடிநீர் பாட்டில்கள் விரைவில் விற்பனை

    • ஆவினில் வருமானத்தைப் பெருக்கும் நோக்கில் 500 மி.லி. மற்றும் 1000 மி.லி. குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
    • அ.தி.மு.க. ஆட்சியின்போது அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் அம்மா மினரல் வாட்டர் என்ற பெயரில் ஒரு லிட்டர் 10 ரூபாய்க்கு குடிநீர் விற்கப்பட்டது.

    சென்னை:

    ஆவினில் மலிவு விலை குடிநீர் பாட்டில்கள் இரு மாதங்களுக்குள் விற்பனைக்கு வரும் என தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் தெரிவித்து உள்ளது.

    இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்படும் இரண்டாவது குடிநீர் விற்பனைத் திட்டமாக இது அமையும்.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பால் பாக்கெட்டுகள் விலையை உயர்த்தாமல் ஆவினில் வருமானத்தைப் பெருக்கும் நோக்கில் 500 மி.லி. மற்றும் 1000 மி.லி. குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. ஆவினில் அனைத்துக் கடைகள், பேருந்து நிலையங்களில் இந்த குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்தனர்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் அம்மா மினரல் வாட்டர் என்ற பெயரில் ஒரு லிட்டர் 10 ரூபாய்க்கு குடிநீர் விற்கப்பட்டது. பின்னர் இத்திட்டம் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×