என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருத்தணி அருகே ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியவர் கைது
- திருத்தணி வழியாக கஞ்சா கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் தமிழக எல்லை பகுதியில் பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திருத்தணி:
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக கஞ்சா கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் திருத்தணி டிஎஸ்பி. விக்னேஷ் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் தமிழக எல்லை பகுதியில் பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திரா மாநிலத்திலிருந்து தமிழகத்தை நோக்கி சந்தேகப்படும்படி வந்த நபரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த நபர் 2 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவர் ஆந்திரா மாநிலம் புத்தூர் பகுதியை சேர்ந்த சேகர் (வயது 44) என்பதும் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






