search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா விற்பனை- லாரி டிரைவர்கள் 3 பேர் கைது
    X

    கஞ்சா விற்பனை- லாரி டிரைவர்கள் 3 பேர் கைது

    • ஆறுமுகம் நகர் விரிவு பகுதியில் நேற்று இரவு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • போலீசார் மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் மடக்கி விசாரணை நடத்தினர்.

    போரூர்:

    ராமாபுரம், ஆறுமுகம் நகர் விரிவு பகுதியில் நேற்று இரவு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் மடக்கி விசாரணை நடத்தினர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர்களான கவுதம், மாரிமுத்து, சதிஷ் என்பதும் கஞ்சா பதுக்கி வைத்து விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கவுதம் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×