search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே இலவச கண் சிகிச்சை முகாம்
    X

    கண் சிகிச்சை முகாமை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    சங்கரன்கோவில் அருகே இலவச கண் சிகிச்சை முகாம்

    • முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டது.
    • பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்டம் சார்பில் நாகர்கோவில் பெஜான்சிங் மருத்துவமனை மருத்துவ குழுவினர் மூலம் சங்கரன்கோவில் தெற்கு ஒன்றியம் வீரசிகாமணியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. முகாமிற்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். இதில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டது. தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக லென்ஸ், மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் மாரிசாமி, நிர்வாகிகள் முருகையா, வைரமுத்து, வெள் ளைச்சாமி, வேலுத்தாய், முனியம்மாள், முக்கையா, தர்மராஜ், சந்திரன், ஈஸ்வரன், சந்திரசேகர், ஹைதர்அலி, கடல்துரை, ராமகிருஷ்ணன், நடராஜன், பாஸ்கர், மதியழகன், பூக்குமார், கருப்பசாமி வீரபாண்டி, கணேசன், முருகன், கிருஷ்ணன், சண்முகையா, குருசாமி, அனுசிய பாண்டியன், சுப்பையா, கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் உதயகுமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×