search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூரில் இலவச கண் மருத்துவ முகாம்
    X

    வாசுதேவநல்லூரில் இலவச கண் மருத்துவ முகாம்

    • இலவச கண் மருத்துவ முகாமில் சுமார் 800 பேருக்கு இலவச கண் பரிசோதனை செய்தனர்.
    • கைப்பேசியினால் கண்ணுக்கு ஏற்படும் பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

    நெல்லை:

    வாசுதேவநல்லுார் எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம் வாசுதேவநல்லுார் எஸ். தங்கப்பழம் மருத்துவக்கல்லூரியில் நடைபெற்றது.

    எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி. முருகேசன் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துமனை மருத்துவர் அபிநயா, விழி ஒளி ஆய்வாளர்கள் இந்திரசுந்தரி, ராமபிரியா, முகாம் மேலாளர் சேக்அப்துல்லா ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

    எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தில் பயிலும் மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சுமார் 800 பேருக்கு இலவச கண் பரிசோதனை செய்தனர்.

    இதில் கண் எவ்வாறு பாதுகாப்பது , கைப்பேசியினால் கண்ணுக்கு ஏற்படும் பிரச்சினைகள், கண்புரை, வயது முதிர்வு சார்ந்த கண் நோய்கள், சீரான உணவு பழக்க வழக்கங்கள் குறித்த விழிப்புணர்வு சிகிச்சை முறைகளை கண் மருத்துவ குழுவினர்களால் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

    முகாமிற்கான ஏற்பாடுகளை இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் ஆராய்ச்சி மைய ஆசிரியர்கள் மற்றும் எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள அலுவலர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×